திருவாரூர்: டிடிவி தினகரன் ஒரு சர்வாதிகாரி என்றும் அவர் கிச்சன் கேபினட் வைத்துக்கொண்டு நம்பி வந்தவர்களை இம்சைப்படுத்துவதால் அனைவரும் அவரைவிட்டு விரைவில் வெளியேறுவர் என்றும் திவாகரன் தெரிவித்துள்ளார்.முன்னாள் முதல்வர் அண்ணாவின் 50-வது நினைவு தினத்தையொட்டி திருவாரூரில் உள்ள அவரது சிலைக்கு அண்ணா திராவிடர் கழகம் சார்பில் அதன் பொதுச்செயலாளர் திவாகரன் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது நிருபர்களிடம் திவாகரன் கூறியதாவது: மத்திய பட்ஜெட்டில் ஒரு சில அம்சங்கள் வரவேற்கத்தக்க வகையில் உள்ளன. அதன்படி ரூ.5 லட்சம் வரையில் வருமான உச்சவரம்பு என்பது வரவேற்கத்தக்கது. இருப்பினும் விவசாயிகளுக்கு போதுமான திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. அமமுக என்பது ஒரு மூழ்கும் கப்பல். அதனை வழிநடத்தும் டிடிவி தினகரன் ஒரு விஷக்கிருமி.