தி.மலை: நரியாப்பட்டு வேளாண் கூட்டுறவு வங்கியில் இரவு, பகலாக தேசியக் கொடி பறப்பதாக பொதுமக்கள் புகார் செய்துள்ளனர். குடியரசு தினத்தன்று ஏற்றப்பட்ட தேசியக்கொடியை இதுவரை கீழே இறைக்கவில்லை என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அலட்சியமாக இருக்கும் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.