புதுடெல்லி: ஏர் இந்தியா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் அரவிந்த் ஜாதவ் மற்றும் மூத்த அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் முன்னாள் தலைவர், நிர்வாக இயக்குனர் அரவிந்த் ஜாதவ். இவர் கடந்த 2009-2010ம் ஆண்டுகளில், பொது மேலாளர் பதவிக்கு காத்பாலியா, அமிதாப் சிங், ரோஹித் பாசின் உள்பட 5 பேரை நியமிக்க பரிந்துரைத்தார். இவர்களில் காத்பாலியா மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்த போதும், லஞ்ச ஒழிப்பு துறையின் தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், அமிதாப் சிங், பாசின் மீதும் புகார்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கும் தடையில்லா சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.