ரியாத்: சவுதி அரேபியாவிற்கு வீட்டு வேலைக்கு சென்ற தமிழ் பெண்கள் கொத்தடிமைகளாக தவித்து வருவதாக கண்ணீருடன் கதறும் வீடியோ பதிவு சமூகவலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் அனைவரும் ஆண்டுக்கணக்கில் ஊதியம் இல்லாமல் கொத்தடிமைகளாக வேலை செய்து வருவதாக கூறுகின்றனர். அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டு ஊதியமும் கொடுக்கப்படாமல் குடும்பத்தினரை பிரிந்து சவுதியில் தவிக்கும் தங்களை மீட்கும்படி கெஞ்சும் வீடியோ பதிவு காண்பவரை கண்ணீரில் ஆழ்த்துவதாக உள்ளது.