ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பேசுவோரை கைது செய்வதா? எஸ்.டி.பி.ஐ. கடும் கண்டனம்

சென்னை: எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர் அகமது நவவி வெளியிட்ட அறிக்கை: ஒட்டுமொத்த தமிழக மக்களின் கோரிக்கையான ஆலையை நிரந்தரமாக மூடும் கொள்கை தீர்மானத்தை நிறைவேற்றாமல், ஆலையை திறக்க தமிழக அரசு அனுமதிக்காது என்று  சொல்லி வருகிறது. அதே வேளையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பேசினாலே கைது என்கிற சூழலையும் காவல்துறை ஏற்படுத்தி வருகிறது. தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை உறுதியாக தெரிவிக்க வேண்டும். அதோடு தூத்துக்குடியில் காவல்துறை மூலம் மேற்கொண்டுவரும் கைது நடவடிக்கையை நிறுத்துவதோடு கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: