முன்னாள் கிரிக்கெட் வீரர் மார்டினுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிதியுதவி

வதோதரா: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மார்டினுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.3 லட்சம் நிதியுதவி அளித்துள்ளது. கடந்த டிச.28-ம் தேதி வதோதரா அருகே சாலை விபத்தில் சிக்கி ஜேகப் மார்ட்டின் படுகாயமடைந்தார். வதோதராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர், கவலைக்கிடமான நிலையில் உள்ளார் என்றும் வென்டிலேட்டர் கருவியின் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: