மதுரை : திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக திருமங்கலத்தை சேர்ந்த தாமோதரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைகிளையில் மனுதாக்கல் செய்துள்ளார். அறிவிக்கப்பட்ட தேர்தலை ரத்துசெய்ய தலைமை தேர்தல் ஆணையருக்கு அதிகாரம் இல்லை என வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் ரத்து செய்ய மத்திய அரசுடன் ஆலோசித்து ஒப்புதல் பெறவில்லை எனவும் மனுதாரர் புகார் அளித்துள்ளார்.