திருவனவந்தபுரம்: கேரளாவில் வயலுக்கு பூச்சிக்கொல்லி மருந்து அடித்த 2 விவசாயிகள் பரிதாபமாக இறந்தனர்.கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டம் செறுவல்லா அருகே பெரிங்கரை பகுதியை சேர்ந்தவர்கள் சனல்குமார்(42), தங்கச்சன் (68). இருவரும் விவசாயிகள். நேற்று முன்தினம் அங்குள்ள வயலுக்கு பூச்சிக்கொல்லி மருந்து அடிக்க இருவரும் சென்றனர். சனல்குமார் மோட்டார் இயந்திரத்தை பயன்படுத்தி பூச்சி மருந்து அடித்து கொண்டிருந்தார். அவருக்கு அருகே தங்கச்சன் உள்பட 5 பேர் நின்று கொண்டிருந்தனர்.திடீரென 6 பேரும் மயங்கி விழுந்தனர். இதை கண்ட அந்த பகுதியினர் விரைந்து சென்று 6 பேரையும் மீட்டு சங்கனாசேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தங்கச்சன், சனல்குமார் பரிதாபமாக இறந்தனர். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தகவல் அறிந்ததும் திருவல்லா போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.