மக்களவை தேர்தல் பற்றி புரளி

புதுடெல்லி: மக்களவைத் தேர்தல் தேதி குறித்து சமூக வலைதளங்களில் புரளி கிளப்பியது தொடர்பாக காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கும்படி டெல்லி தலைமை தேர்தல் அதிகாரிக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மக்களவைத் தேர்தல் 2014-ம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது. இதன் பதவிக்காலம் முடிய உள்ள நிலையில், வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மக்களவை தேர்தல் தேதி தொடர்பாக சமூக வலைதளங்களில் புரளி கிளப்பி விடப்பட்டுள்ளது. இது வைரலாக பரவியது. இந்த வதந்தியை பரப்பியவர்கள், நிறுவனங்கள் மீது டெல்லி நகர காவல்துறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும்படி டெல்லி தலைமை தேர்தல் அதிகாரிக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: