ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் நேற்று கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு சிறப்பு ஆயுஷ் ஹோமம் நடத்தப்பட்டது. அங்கு அவர் ₹1.50 கோடியில் புதுப்பிக்கப்பட்ட 30 தீர்த்தக்குளங்களை மக்களுக்கு அர்ப்பணித்தார். ராமேஸ்வரத்தில் ₹1.50 கோடி செலவில் 30 தீர்த்த குளங்கள் புதுப்பிக்கப்பட்டன. நேற்று சுவாமி விவேகானந்தரின் 156வது பிறந்தநாளை முன்னிட்டு இவற்றை மக்களுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடந்தது. காலை 8 மணிக்கு தங்கச்சிமடம் மங்கள தீர்த்த வளாகத்தில் தீர்த்தம் நிரப்பப்பட்ட கலசங்கள் வைக்கப்பட்டு கலசபூஜை நடந்தது. இதில் பங்கேற்ற கவர்னர் பன்வாரிலால் புரோகித் கல்வெட்டினை திறந்து வைத்து, புதுப்பிக்கப்பட்ட 30 தீர்த்தக்குளங்களை மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். இந்த விழாவுக்கு அமைச்சர் மணிகண்டன் வருகைக்காக கவர்னர் மேடையில் 5 நிமிடம் காத்திருந்தார்.