சென்னை: ஜி.எஸ்.டி கவுன்சிலில் தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பின் பல கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்பட்டதற்கு மத்திய, மாநில அரசுகளுக்கு பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மத்திய, மாநில அரசுகளுக்கு ஜி.எஸ்.டி கவுன்சில் மூலமாக பல்வேறு கோரிக்கைகள் அளிக்கப்பட்டன. அதில் பல கோரிக்கைகளுக்கு டெல்லியில் நடந்த கவுன்சில் கூட்டத்தில் தீர்வு காணப்பட்டன. குறிப்பாக, ஜி.எஸ்.டி பதிவு உச்சவரம்பு 20 லட்சத்திலிருந்து 40 லட்சமாக உயர்த்தப்பட்டது. இது சுமார் 11 லட்சம் வணிகர்களுக்கு பயனளிக்கும்.
இந்த ஜி.எஸ்.டி வரி தளர்வுகள் முறைப்படுத்த உதவிகரமாக இருந்த அமைச்சர் ஜெயக்குமார், ஜி.எஸ்.டி துறை சார்ந்த அரசு அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.