கொல்கத்தா: பாங்காக்கில் இருந்து டெல்லிக்கு வந்த ஏர் இந்தியா விமானம் நடு வானில் எரிபொருள் கசிந்ததால் கொல்கத்தா விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டு அங்கு, நேற்று இரவு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. நேற்று பாங்காக்கில் இருந்து டெல்லிக்கு வந்த AI 335 என்ற எண் கொண்ட ஏர் இந்தியா விமானத்தின் எரிபொருள் சேமிப்பகத்தில் இருந்து எரிபொருள் கசிந்ததால் அருகிலிருந்து கொல்கத்தா விமான நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. நேற்று இரவு 10.35 மணியளவில் அந்த விமானத்துக்கு முன்னுரிமை கொடுத்து கொல்கத்தா விமான நிலையத்தில் தரையிறக்க வான் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையம் அனுமதித்தது.