சென்னை: பிளாஸ்டிக் தடையை அமலபடுத்த 6 மாத கால அவகாசம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: பிளாஸ்டிக் தடை சட்ட அமலாக்கத்தை மறு ஆய்வு செய்து குறைந்தது 6 மாத கால அவகாசம் வழங்கி வணிகர்களுக்கு, விழிப்புணர்வு ஏற்படுத்தி அதன் பின் அமல்படுத்திட வேண்டும். பிளாஸ்டிக் தடையை வணிகர் சங்க பேரமைப்பு கண்டிக்கிறது. சுமார் 26 ஆயிரம் உற்பத்தியாளர்கள், 3 லட்சம் வணிகர்கள் மற்றும் பல லட்சம் பயனாளிகள் குடும்பங்களின் வாழ்வாதாரங்களை இன்றைக்கு கேள்விக்குறி ஆகியுள்ளது.