திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில் கார் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கொடைக்கானல் பழனி சாலையில் சவரிக்காடு பகுதியில் உள்ள பள்ளத்தாக்கு பகுதியில் கார் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கேரளாவில் இருந்து கொடைக்கானல் நோக்கி சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் பாய்ந்ததால் காரில் பயணித்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். தூக்கி வீசப்பட்டதில் ஒருவர் மரத்தில் தலைகீழாக தொங்கியபடியே உயிரிழந்துள்ளார். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.