சென்னை:ஊதிய முரண்பாடுகளை நீக்க வலியுறுத்தி போராடி வரும் இடைநிலை ஆசிரியர்களை தமிழக முதல்வர் அழைத்துப் பேசி, சுமுக தீர்வு காண வேண்டுமென்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.இது குறித்து திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை முன்வைத்து, ஊதிய முரண்பாடு களை நீக்க வேண்டும் என்று 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதை அதிமுக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். 2009 ஜூன் மாதத்திற்கு முன்பு நியமிக்கப்பட்டவர்களுக்கும் அதன் பிறகு வேலைக்குச் சேர்ந்தவர்களுக்கும் ₹ 3,770 சம்பள வித்தியாசம் இருக்கிறது என்ற பிரச்னையை இடை நிலை ஆசிரியர்களின் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகும் அதை நியாயமான முறையில் தீர்க்க எண்ணாமல் அரசு உதாசீனப்படுத்துவது மிகுந்த வேதனைக்குரியது. அறவழியில் அமைதியாகப் போராடும் அரசு ஆசிரியர்களை அழைத்துப் பேசுகிறேன் என்று உறுதியளித்து நம்ப வைத்து விட்டு, பிறகு அவர்களை ஏமாற்றி இருக்கும் முதல்வரின் பிழையான செயல் ஒரு முதல்வருக்கு உள்ள நற்பண்பு அல்ல. பெண்கள் அதிக எண்ணிக்கையில் இந்த தொடர் போராட்டத்திலும் உண்ணாவிரதத்திலும் தங்க ளின் உயிரைத் துச்சமென நினைத்துப் போராடி, பல ஆசிரியர்கள் மயக்கமடைந்து இருக்கும் உயிருக்கு ஆபத்தான இந்த நிலையிலும் அதிமுக அரசு சம்பந்தம் இல்லா ததைப் போல வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது விபரீதமானது, மன்னிக்க முடியாதது.