ஸ்ரீநகர் : ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தில் இந்தோ-திபெத்திய எல்லை போலீசார் சென்ற பேருந்து பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 1 இந்தோ-திபெத்திய எல்லை பிரிவு போலீசார் உயிரிழந்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரம்பன் மாவட்டத்தில் கோனி நலா பகுதியில் பேருந்து சென்று கொண்டு இருந்த பொது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த பேருந்தில் 35 இந்தோ-திபெத்திய எல்லை பிரிவு போலீசார் பயணம் செய்தனர். ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பேருந்து வளையும் போது ஓட்டுநர் கட்டுப்பாட்டில் இல்லாமல் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து ரம்பன் மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில் இதுவரை காயமடைந்த 24பேரை மீட்டுள்ளதாகவும் , ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.