தி.நகரில் மெகா மார்கழி இசை விழா

சென்னை: சென்னையில் மெகா மார்கழி இசை விழா, தி.நகர் சர்.பி.டி. தியாகராயர் அரங்கில், கடந்த 13ம் தேதி தொடங்கி, 19ம் தேதி (இன்று) வரை நடைபெறுகிறது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இசை விழாவை தொடங்கி வைத்தார். தமிழ் கலாச்சார சங்க தலைவர் ஜெகந்நாதன் ஆரோக்கியராஜ் தலைமை வகித்தார். சுங்கம் மற்றும் கலால் ஆணையர் சிவன் கண்ணன் ஐஆர்எஸ், ஜெமினி குரூப் சேர்மன் சுதாகர் ஆர்.ராவ், கலர்ஸ் டிவி தலைமை நிர்வாகி அனூப் சந்திரசேகர், நடிகை சௌகார் ஜானகி, வீணா ரமேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். இன்று மாலை நிகழ்ச்சிகளாக வீணை, வாய்ப்பாட்டு, பரதநாட்டியம், இசை நாட்டியம் உள்ளிட்டவை நடைபெற உள்ளன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: