ஐதராபாத்: தெலங்கானாவில் நடந்த சட்டப்பேரவை தேர்தலின் முடிவு நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் சார்பில் நலகொண்டா தொகுதியில் போட்டியிட்ட கோமதி ரெட்டி வெங்கட் ரெட்டி, தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி வேட்பாளர் காஞ்சரலா பூபால் ரெட்டியிடம் 8,633 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இந்த முடிவை கேட்டதும் திடீரென அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாகி மயங்கி விழுந்தார். ஆதரவாளர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.