போடி அருகே பரபரப்பு விவசாயிகள் முற்றுகை ரூட்டை மாற்றிய ஓபிஎஸ்

போடி: விவசாயிகளின் முற்றுகை போராட்டம் குறித்து தகவல் அறிந்த துணை முதல்வர் ஓபிஎஸ், வேறு பாதை வழியாக ஆய்வுக்கு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.தேனி மாவட்டம், போடி அருகே சங்கராபுரம் - குச்சனூர் இணைப்புச்சாலை பகுதியில் சிப்காட் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தை பார்வையிடுவதற்காக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அப்போது 18ம் கால்வாயில் மீண்டும் நீர் திறக்காததை கண்டித்து, ஓ.பன்னீர்செல்வத்தை ராசிங்காபுரம் அருேக முற்றுகையிடுவது என, அப்பகுதி விவசாயிகள் முடிவு செய்திருந்தனர்.

இதற்காக ராசிங்காபுரத்தில் பாசன தலைவர் வாசகர் தலைமையில் பெருமளவில் விவசாயிகள் திரண்டிருந்தனர். இதுகுறித்த தகவல் அறிந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவ்வழியாக செல்லவில்லை. வேறு வழியாக சங்கராபுரம் சென்று விட்டார். இதனால் விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர். ராசிங்காபுரம் ஓபிஎஸ்சின் போடி தொகுதிக்குள் உள்ளது. தேர்தல் வந்தால் மீண்டும் அங்கு ஓட்டு கேட்டு செல்ல வேண்டி வரும். எனவே மீண்டும் எதிர்ப்பு வராமல் சமாளிக்க 18ம் கால்வாயில் தண்ணீர் திறக்க ஓபிஎஸ் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: