வெலிங்டன்: நியூசிலாந்து ஏ அணியுடன் நடந்த 3வது ஒருநாள் போட்டியில் (அங்கீகாரமற்றது), 75 ரன் வித்தியாசத்தில் ஹாட்ரிக் வெற்றியை வசப்படுத்திய இந்தியா ஏ அணி 3-0 என தொடரை முழுமையாகக் கைப்பற்றி அசத்தியது. மவுன்ட் மவுங்காநுயி, பே ஓவல் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்று முதலில் பேட் செய்த இந்தியா ஏ 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 275 ரன் குவித்தது. தொடக்க வீரர் அன்மோல்பிரீத் சிங் அதிகபட்சமாக 71 ரன் (80 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசினார். இஷான் கிஷண் 39, ஷ்ரேயாஸ் அய்யர் 23, அங்கித் பாவ்னே 48, விஜய் ஷங்கர் 42, அக்சர் பட்டேல் 31 ரன் எடுத்தனர்.