திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனத்தையொட்டி நாளை மறுநாள் 6 மணி நேரம் பக்தர்கள் தரிசனம் நிறுத்தி வைக்கப்படுகிறது.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் தெலுங்கு வருடப்பிறப்பு (யுகாதி), ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசியொட்டி முன்னதாக வரக்கூடிய செவ்வாய்க்கிழமைகளில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் (தூய்மைபடுத்துதல்) நடப்பது வழக்கம்.
அதன்படி வரும் 18ம்தேதி வைகுண்ட ஏகாதசி, 19ம்தேதி துவாதசி ஆகிய இரண்டு நாட்கள் பரமபத வாயில் எனும் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இதையொட்டி நாளை மறுநாள் (செவ்வாய்) காலை கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகிறது.