சென்னை: பெண்கள் விடுதியில் கேமரா பொருத்திய வழக்கினை சிசிபிக்கு மாற்ற போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர். சென்னை, ஆதம்பாக்கம் தில்லைகங்கா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வேலைக்கு செல்லும் பெண்களுக்கான தங்கும் விடுதியை நடத்தி வந்த குரோம்பேட்டை அஸ்தினாபுரம் பகுதியை சேர்ந்த சம்பத்ராஜ் என்ற சஞ்சீவி (48). இவர் நடத்திய விடுதியில் 6 பெண்கள் தங்கி இருந்தனர். விடுதியில் ரகசிய கேமரா வைத்திருந்ததாக சஞ்சீவியை கைது செய்தனர்.மேலும் அவர் இதனை இணையதளங்களில் வெளியிடவும் திட்டமிட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.