போலீஸ் சேனல்..... தில்லாலங்கடி இன்ஸ்-க்கு எஸ்.பி காட்டிய கனிவு

அதியமான் கோட்டை மாவட்டத்தின் தொப்பூர் கணவாயில் எண்ெணய் ேலாடு லாரி தீப்பிடித்து எரிந்த சம்பவத்தின் பின்னணியில் மூளையாக இருந்தவர் கணவாய் இன்ஸ்பெக்டர் என்ற தகவல் ஆதாரங்களுடன் சிக்கியுள்ளது. இதற்காக அவருக்கு 5லகரம் பேசப்பட்டதாக தகவல் வெளியானது, காக்கிகள் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு முன்பும் பெரும் சர்ச்சைகளில் சிக்கினாராம் இந்த தில்லாலங்கடி இன்ஸ்பெக்டர். ஆனாலும் அவருக்கு எப்போதும் கனிவு காட்டியவர் மாவட்ட எஸ்பி. இதுதான் அவரது தகிடுதத்தங்களுக்கு அஸ்திவாரம் போட்டுக் ெகாடுத்தது என்கின்றனர் நேர்மையான காக்கிகள். ‘‘பொம்மிடி ஸ்டேஷனில் இந்த இன்ஸ், பணியாற்றியபோது, ஆளுங்கட்சி பிரமுகர் நடத்திய பள்ளியில் லட்சம் ரூபாயை அபேஸ் செய்தார் பள்ளி ஊழியர்.

அந்த ஊழியரை மிரட்டி, பணத்தை லபக்கியதோடு பிரமுகருக்கும் டாட்டா காட்டினார் இன்ஸ். இந்த விவகாரத்தில் சஸ்பெண்ட் நடவடிக்கை எதுவும் எடுக்காத எஸ்பி, கணவாய்க்கு இடமாற்றம் மட்டும் செய்தார். நடுவில் நிறைய சில்லரை டீலிங்குகளை முடித்தவருக்கு, எண்ணெய் லாரி எரிப்பு விவகாரத்தில் வைரலான வாட்ஸ்அப் வீடியோ பெரும் தலைவலியை கொடுத்தது. இந்த முறையும் தில்லாலங்கடியை இடமாற்றம் மட்டுமே ெசய்தார் எஸ்பி. ஆனால் வீடியோ விவகாரம் விஸ்வரூபமானதால் வேறுவழியே இல்லாமல் சஸ்ெபண்ட் செய்துள்ளார்,’’ என்கின்றனர் நேர்மையான காக்கிகள்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: