டெல்லி: நீலகிரி ஆட்சியர் திவ்யாவை இடமாற்றம் செய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. யானைகள் வழித்தடம் தொடர்பான வழக்கில் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை நீலகிரி ஆட்சியர் திவ்யாவை தமிழக அரசு மாற்றக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.