சென்னை: ‘வீட்டில் ‘யூபிஎஸ்’ மற்றும் ‘ஜெனரேட்டர்’ மூலமாக மின்சாரம் எடுத்து பயன்படுத்தும் போது, ‘மெயின் பாக்சை ‘ஆப்’ செய்திருக்க வேண்டும்’ என, தமிழ்நாடு மின்வாரியம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை: மின்நுகர்வோர் தங்கள் வீட்டில் பொருத்தியுள்ள ‘யூபிஎஸ்’, மின்வாரிய எர்த்துடன் இணைக்கப்பட்டு இருக்கும். அவ்வாறு உள்ளநிலையில், ‘யூபிஎஸ்’ஐ பயன்படுத்தி வீட்டில் மின்சாரம் உபயோகித்தால், எர்த் வழியாக மின்கம்பத்திற்கு மின்சாரம் வந்து கொண்டிருக்கும்.