சென்னை: தமிழக அரசு மீதுள்ள நம்பிக்கை காரணமாகவே பிரதமர் மோடி புயல் பாதிப்பை ஆய்வு செய்ய வரவில்லை என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர்கள், பிரதமர் வருகைக்காக மாநில அரசு காத்திருக்கவில்லை என்றும் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதே அரசின் தலையாய கடமை என்றும் கூறியுள்ளார்.