டெல்லி: பிசிசிஐக்கு எதிராக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தொடர்ந்த வழக்கை, ஐசிசி தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது. மேலும் 2014ஆம் ஆண்டு தொடங்கி 2023ஆம் ஆண்டு வரை 6 தொடர்களை நடத்துவதென பிசிசிஐயும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் ஒப்பந்தம் செய்து கொண்டன. ஆனால் இருநாட்டு அரசியல் சூழல் காரணமாக தொடர்களை விளையாட முடியவில்லை. இதனால், பிசிசிஐயிடம் இருந்து 447 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு ஐசிசி தீர்ப்பாயத்தில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வழக்கு தொடர்ந்தது.