சென்னை: பழ.நெடுமாறன் புத்தகம் அழிக்க வேண்டும் என்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:‘தமிழீழம் பிறக்கிறது’ என்ற பழ.நெடுமாறனின் நூலை அழிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பைக் கண்டு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அதிர்ச்சியடைந்தது.‘தமிழீழம்’ என்ற கொள்கை நிலையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கவில்லை; ஏற்கவில்லை. ஆனால், அந்தக் கருத்துள்ளவர்கள், தங்கள் நிலையை மக்களின் சிந்தனைக்கு வைப்பதற்குரிய, மறுக்க முடியாத உரிமை ஜனநாயக அரசியல் அமைப்பின் சாரமாக இருந்து வருகிறது.