திருக்காட்டுப்பள்ளி: திருக்காட்டுப்பள்ளி அருகே 2 ஆண்டுகளாக தூர்வாரப்படாத பாசன வாய்க்காலை விஷ்ணம்பேட்டை கிராம விவசாயிகளே நேற்று தூர்வாரினர். திருக்காட்டுப்பள்ளி காவிரி ஆற்று புதுப்பாலம் அருகில் காவிரியில் இருந்து பாசனத்துக்காக புதுச்சத்திரம் வாய்க்கால் தலைப்பு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாய்க்கால் மூலம் 1,009 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. இந்த வாய்க்கால் மூலம் புதுச்சத்திரம், விஷ்ணம்பேட்டை, பவனமங்கலம், பொதகிரி வரையில் சுமார் 9 கிலோ மீட்டர் தூரம் செல்லும் தண்ணீர் விவசாயம் மற்றும் குடிநீருக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த வாய்க்காலை கடந்த 2 ஆண்டுகளாக தூர்வாராததால் தண்ணீர் ஏறி பாய்வதில்லை.