மக்கள் பிரச்னைக்கு தீர்வு காண்பேன்: பரந்தாமன் வாக்குறுதி

சென்னை: எழும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் வழக்கறிஞர் பரந்தாமன் நேற்று ஷெனாய் நகர் பகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களான மகளிருக்கு மாதம் ரூ.1000, கொரோனா பாதிப்பு நிவாரணம் ரூ.4000, சிலிண்டருக்கு ரூ.100 மானியம், சொந்தமாக ஆட்டோ வாங்க ரூ.10 ஆயிரம் மானியம் உள்ளிட்டவற்றை எடுத்துக்கூறி வாக்கு சேகரித்தார். பொதுமக்கள் ஒவ்வொரு வீட்டில் அவருக்கு மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி, ஆரத்தி எடுத்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது அவர் பேசுகையில், ‘இந்த தொகுதியில் உள்ள மக்களின் பிரச்னைகளை உடனுக்குடன் தீர்த்து வைப்பேன். தினமும் என்னை நீங்கள் சந்திக்கலாம். எப்போதும் உங்களுடனே இருப்பேன். இந்த தொகுதியில் என்னென்ன பிரச்னைகள் உள்ளது என்பதை அறிந்துள்ளேன். அவற்றை திமுக ஆட்சி வந்தவுடன் சரி செய்வேன்.பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் நிறைவேற்றி கொடுப்பேன். எனவே திமுகவிற்கு வாக்களியுங்கள்,’ என்றார். அதற்கு பொதுமக்கள் இந்த தொகுதி திமுகவின் கோட்டை எங்களுடைய வாக்குகள் அனைத்தும் திமுகவிற்க்கு தான். திமுக தலைவர் முதல்வராவது உறுதி. நீங்கள் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். எங்களின் சட்டமன்ற உறுப்பினர் நீங்க தான் என்று வாக்குறுதி அளித்தனர். திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உடன் சென்று வாக்கு சேகரித்தனர். …

The post மக்கள் பிரச்னைக்கு தீர்வு காண்பேன்: பரந்தாமன் வாக்குறுதி appeared first on Dinakaran.

Related Stories: