திருவண்ணாமலை : திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு மகாதீப கொப்பரை சீரமைக்கும் பணி நேற்று தொடங்கியது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா, வரும் 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதன்பின், விழா 10 நாட்கள் நடைபெறும்.
20ம் தேதி மகா தேரோட்டம், 23ம் தேதி அதிகாலை பரணி தீபமும், மாலையில் கோயிலுக்கு பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும். இந்த கொப்பரை வெண்கலத்தால் ஆன 5 அடி உயரமுடையது.