தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் இண்டூர் கோரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் முருகன் (27). பிஇ பட்டதாரியான இவர், அதே பகுதியை சேர்ந்த வேறு சமூகத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண்ணை காதலித்தார். இவர்களது காதலுக்கு இருதரப்பிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், முருகன் அந்த பெண்ணுடன் ஊரை விட்டு வெளியேறி கோயிலில் திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னரும், காதல் ஜோடிக்கு கடும் எதிர்ப்பு இருந்ததால், முருகன் மீண்டும் ஊருக்கு வரவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம், முருகனின் தந்தை செல்வம், வாகன விபத்தில் உயிரிழந்தார். அவரது சடலத்தை கைப்பற்றிய போலீசார், பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.