சர்கார் படத்துக்கு அரசியல் சூழ்ச்சியால் அழுத்தம் கொடுப்பதா?: தமிழக அரசுக்கு கமல்ஹாசன் கண்டனம்

சென்னை: சர்கார் படத்துக்கு சட்ட விரோதமான அரசியல் சூழ்ச்சிகளால் அழுத்தம் கொடுப்பது, இந்த அரசுக்கு புதிதல்ல என கருத்து தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் டிவிட்டரில் கூறியிருப்பதாவது:முறையாகச் சான்றிதழ் பெற்று வெளியாகியிருக்கும் சர்கார்   படத்துக்கு, சட்டவிரோதமான அரசியல் சூழ்ச்சிகள் மூலம் அழுத்தம் கொடுப்பது  இவ்வரசுக்கு புதிதல்ல. விமர்சனங்களை  ஏற்கத் துணிவில்லாத அரசு தடம்  புரளும்.  அரசியல் வியாபாரிகள்  கூட்டம் விரைவில் ஒழியும். நாடாளப்போகும்  நல்லவர் கூட்டமே வெல்லும். இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: