மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு 7ம் தேதி இறைச்சி கடைகள் மூடல்

சென்னை: மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு 7ம் தேதி இறைச்சி கடைகள் மூட வேண்டும் என்று மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கை:மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு சென்னை மாநகராட்சி பொதுசுகாதாரத்துறை (கால்நடை மருத்துவப்பிரிவு) கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து இறைச்சிக் கூடங்களும் அரசு உத்தரவின்படி வரும் 7ம் தேதி மூடப்படுகின்றன.

அதேபோல், ஆடு, மாடு, இதர இறைச்சி விற்பவர்கள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களில் பதப்படுத்திய இறைச்சி விற்பனை செய்யவும் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, அரசு உத்தரவினை செயல்படுத்த  வியாபாரிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: