மதுரை : மதுரையில் நிதி நிறுவனம் நடத்தி 5000 பேரிடம் ரூ.100 கோடி வரை மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் ஆன்லைன் குற்ற கண்டுபிடிப்பில் அனுபவமுள்ள காவல் ஆய்வாளரை விசாரணை அதிகாரியாக நியமிக்க சிபிசிஐடி எஸ்.பி-க்கு ஆணையிட்டுள்ளது.