சென்னை: சென்னை மாநகராட்சியில் 9, 10 மற்றும் 13 ஆகிய மண்டலங்களில் துப்புரவு பணிகளை செய்வதற்கான ஒப்பந்தம் ஏற்கனவே தனியாருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 1, 2, 3, 7, 11, 12, 14 மற்றும் 15 ஆகிய மண்டலங்களிலும் துப்புரவு பணிகளை மேற்கொள்ளும் பணியை தனியாருக்கு கொடுக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்து கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி டெண்டர் வெளியிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 30க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி ரிப்பன் மாளிகையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, கடந்த 11ம் தேதி கோட்டையை முற்றுகையிட்டனர்.