ஒகேனக்கல்: ஒகேனக்கல் அருவியில் நீர்வரத்து குறைந்த போதிலும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்தும் பரிசில் சவாரி செய்தும் ஆனந்தத்தில் திளைத்துள்ளனர். கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மலையளவு வெகுவாக குறைந்துள்ளதால் ஒகேனக்கலுக்கு வரும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 5,000 கன அடியாக சரிந்துள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் ஒகேனக்கலுக்கு சுற்றுலாப்பயணிகள் அதிகளவு படையெடுத்து வந்தனர்.