டெல்லி: 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க விவகாரம் தொடர்பாக சபாநாயகர் தனபால் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். 18 எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்று உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியதை அடுத்து தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு நிலவி வருகிறது. உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓரிரு நாளில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக மதுரையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பின் தங்க தமிழ்செல்வன் தெரிவித்தார். இடைத்தேர்தல் வந்தாலும் சந்திக்க தயார் என அவர் தெரிவித்தார். இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆளும் கட்சி தரப்பை சேர்ந்த சபாநாயகர் தனபால் சார்பாக உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.