மத மோதல்களை பாஜ உருவாக்குகிறது முத்தரசன் வேதனை

பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே வயலூருக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்  முத்தரசன் நேற்று வந்திருந்தார். அப்போது, நிருபர்களிடம் அவர் கூறியதாவது: மக்கள் மத்தியில் பாஜகவின் செல்வாக்கு குறைந்து போய் உள்ளது. இதனை மறைப்பதற்காகவே சபரிமலை பிரச்னையை பெரிதாக்கி மத மோதல்களை உருவாக்க முயல்கின்றனர். மக்களின் அடிப்படை பிரச்னைகள் பல உள்ளபோது அதில் கவனம் செலுத்தாமல் விழாக்கள் கொண்டாடுவதிலேயே தமிழக அரசு அக்கறை காட்டுகிறது.

மத்திய, மாநில அரசுகளின் முயற்சியின்மையால் பெட்ரோல், டீசல் விலை உச்சத்தில் உள்ளது. அன்றாடம் மக்கள் பயன்படுத்தும் பொருட்களின் விலையும் கட்டுக்கடங்காமல் உயர்ந்துள்ளது. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு விழா காலங்களில் ஆம்னி பஸ்களின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இவ்வாறு முத்தரசன் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: