பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே வயலூருக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று வந்திருந்தார். அப்போது, நிருபர்களிடம் அவர் கூறியதாவது: மக்கள் மத்தியில் பாஜகவின் செல்வாக்கு குறைந்து போய் உள்ளது. இதனை மறைப்பதற்காகவே சபரிமலை பிரச்னையை பெரிதாக்கி மத மோதல்களை உருவாக்க முயல்கின்றனர். மக்களின் அடிப்படை பிரச்னைகள் பல உள்ளபோது அதில் கவனம் செலுத்தாமல் விழாக்கள் கொண்டாடுவதிலேயே தமிழக அரசு அக்கறை காட்டுகிறது.