சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள சுமார் 80 ஆண்டுகள் பழமையான வக்கீல் சங்கமான லா அசோசியேஷனின் தேர்தல் வரும் நவம்பர் 30ம் ேததி நடைபெறவுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிட்டி சிவில் நீதிமன்ற வக்கீல்கள், சிறு வழக்குகளுக்கான நீதிமன்ற வக்கீல்கள் உறுப்பினராக உள்ள லா அசோசியேஷன் தேர்தல் வரும் நவம்பர் 30 தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 461 உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதியுள்ள வாக்காளர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கை வரும் 30ம் தேதி அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. சங்கத்தின் தலைவர், செயலாளர், துணைத்தலைவர் மற்றும் 11 செயற்குழு உறுப்பினர்களுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.