சென்னை: வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. செப்.30 நிலவரப்படி 80 லட்சத்தை நெருங்கிவிட்டதாக வேலை வாய்ப்பு அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது. அதில் 1.27 லட்சம் மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்புக்காக காத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.