சென்னை: பாதுகாப்பு பணியில் இருந்தபோது அமெரிக்க தூதரக பாதுகாவலரின் வாக்கி டாக்கி மாயமானது. இந்த சம்பவத்தால் மயிலாப்பூரில் பரபரப்பு ஏற்பட்டது சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தில் பாதுகாப்பு பணியில் தனியார் செக்யூரிட்டி நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. வழக்கமாக, அமெரிக்காவில் இருந்து சென்னை வரும் முக்கிய பிரமுகர்களுக்கு இந்த தனியார் செக்யூரிட்டி மூலம்தான் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், மயிலாப்பூர் சிஐடி காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அமெரிக்க நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் தங்கி உள்ளார். இவருக்கு பாதுகாப்பு பணிக்காக தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலை செய்யும் சிவநாதன் (41) அமர்த்தப்பட்டிருந்தார்.
இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு அமெரிக்க தூதரகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கும் வகையில் வாக்கி டாக்கி வழங்கப்படுவது வழக்கம்.