பெய்ஜிங்: சீனாவில் நடைபெறும் வுஹான் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் விளையாட, செக் குடியரசின் பெத்ரா குவித்தோவா தகுதி பெற்றார்.இரண்டாவது சுற்றில் செர்பியாவின் அலெக்சாண்ட்ரா குருனிச்சுடன் நேற்று மோதிய குவித்தோவா 6-3, 6-4 என்ற நேர் செட்களில் எளிதாக வென்று கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு செக். வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா 1-6, 6-3, 3-6 என்ற செட் கணக்கில் சீனாவின் கியாங் வாங்கிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார். சமீபத்தில் நடந்த பான் பசிபிக் ஓபன் தொடரில் பிளிஸ்கோவா சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.