பதான்: ‘‘ராமர் கோயிலை மறந்துவிட்டு, முஸ்லிம் பெண்களுக்கு வக்கீலாக மாறிவிட்டார் பிரதமர் மோடி’’ என பிரவீன் தொகாடியா பேசி உள்ளார். விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் தலைவர் பிரவீன் தொகாடியா, தற்போது, ‘அந்தராஷ்டிரியா இந்து பரிஷத்’ என்ற அமைப்பை நடத்தி வருகிறார். உத்தரப் பிரதேச மாநிலம், பதானில் நேற்று அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: ராமர் கோயில் கட்டவும், காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தான சட்டப்பிரிவு 370ஐ திரும்பப் பெறவும்தான் பிரதமர் மோடியை இந்த நாடு தேர்ந்தெடுத்தது. ஆனால், அவரோ கோயிலுக்கு பதிலாக மசூதிகளுக்கு சென்று கொண்டிருக்கிறார்.