திருப்பதி: ஆந்திர மாநிலத்தில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்பில், சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி முழுஅடைப்பு போராட்டம் நடக்கிறது. இதுகுறித்து, திருப்பதியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பி வரபிரசாத் நிருபர்களிடம் கூறியதாவது: ஆந்திர மாநில சிறப்பு அந்தஸ்து விஷயத்தில் மக்களை ஏமாற்றிய பாஜ, தெலுங்கு தேசம், காங்கிரஸ் கட்சிகளை கண்டித்து 24ம் தேதி (நாளை) மாநிலம் தழுவிய பந்த்துக்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. சிறப்பு அந்தஸ்து வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து தெலுங்குதேசம் கட்சி நாடாளுமன்றத்தில் பாஜ அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை முன்வைத்தது.