சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பம் பெற இன்று கடைசி நாளாகும். தமிழகத்தில் 23 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் விநியோகம் கடந்த 11ம் தேதி தொடங்கியது. 23 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவக் கல்வி இயக்கக இணையதளத்திலும் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து வருகின்றனர். விடுமுறை நாளான நேற்று கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் காலை 10 மணி முதல் மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோருடன் வந்து விண்ணப்பங்களை பெற்று சென்றனர். சென்னை மருத்துவ கல்லூரி, ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி உள்பட அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளிலும் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டது.