மேட்டூர்: நீர்வரத்து அதிகரிப்பால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயரத் தொடங்கியுள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதியிலும், துணை நதியான பாலாறு பகுதியிலும் மழை பெய்து வருவதால், கடந்த 22ம் தேதி முதல் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் விநாடிக்கு 1299 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று விநாடிக்கு 2491 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக, விநாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.