காஞ்சிபுரம் : மதுராந்தகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலினை போலீசார் கைது செய்தனர். ஸ்டாலி ஏற்றப்பட்டுள்ள வாகனத்தை சூழ்ந்து ஏராளமான தொண்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சூழ்ந்ததால் வாகனத்தை நகர்த்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். முன்னதாக மதுராந்தகம் அருகே புதுமண தம்பதியுடன் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சாலை மறியலில் ஈடுபட்டார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் முதலமைச்சர் பதவி விலக்கோரி திமுகவினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.