பெங்களூரு: பெங்களூருவில் 12 வயது சிறுவன் பரத நாட்டியத்தில் ஆயிரம் அரங்கேற்றம் நடத்தி சாதனை படைத்துள்ளார். அவரின் திறமையை பாராட்டி இன்று ஆர்யபட்டா விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. பெங்களூரு காட்டன்பேட்டை பகுதியில் வசிக்கும் ஜெகதீஷ்-ரேகா தம்பதியரின் மகன் மனு, சிறு வயதில் இருந்து பரத நாட்டியம் பயிற்சியில் ஈடுப்பட்டார். கர்நாடகம் மட்டுமில்லாமல் தமிழகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களிலும் பல மேடைகளில் அரங்கேற்றம் நடத்தி பாராட்டு பெற்றுள்ளார். தனது 12 வயதில் ஆயிரம் அரங்கேற்றம் நடத்தி புதிய சாதனைப்படைத்துள்ளார். அவரின் திறமையை பாராட்டி 180க்கும் மேற்பட்ட விருதுகள் கிடைத்துள்ளது.