கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான தேசத்துரோக வழக்கை முதல்வர் பழனிச்சாமி வாபஸ் வாங்கினாரா? ஸ்டாலின் கேள்வி

நெல்லை: கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான தேசத்துரோக வழக்கை முதல்வர் பழனிச்சாமி வாபஸ் வாங்கினாரா? நெல்லையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். உதயகுமார், முகிலன் உள்ளிட்டோர் மீது போடப்பட்ட வழக்குகளை இன்னும் வாபஸ் பெறவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் உதயகுமார், முகிலன் உள்ளிட்டோர் மீதான தேசத்துரோக வழக்குகள் வாபஸ் பெறப்படும். எடப்பாடி பழனிசாமியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதில் தமிழக மக்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழக பொருளாதாரம் மீட்டெடுக்கப்படும் என்று மக்கள் நம்புகின்றனர். 20 ஆண்டு ஆனாலும் மக்கள் பிரச்சனைகளை எடப்பாடி பழனிசாமியால் தீர்த்து வைக்க முடியாது என்று ஸ்டாலின் பேசியுள்ளார். திமுக ஆட்சி அமைந்ததும் 100 நாளில் மக்களின் அடிப்படை பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்று ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்….

The post கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான தேசத்துரோக வழக்கை முதல்வர் பழனிச்சாமி வாபஸ் வாங்கினாரா? ஸ்டாலின் கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: